தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து கரூர் மாவட்டத்திற்கு செல்வதற்காக சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு இன்று மாலை வருகை புரிந்தார். முதல்வருக்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என் .நேரு, சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், காவல் துறை கூடுதல் இயக்குநர் தாமரை கண்ணன், மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் டாக்டர். வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் காஜாமலை பகுதி செயலாளர் காஜாமலை விஜி ஆகியோர் வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் உற்சாக வரவேற்பு பெற்று, கரூரில் நாளை நடைபெறவுள்ள அரசு விழாவில் பங்கேற்பதற்காக காரில் புறப்பட்டுச் சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *