திருச்சி மாநகராட்சி 56 வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மஞ்சுளாதேவி பாலசுப்பிரமணியன் அந்த வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாக சென்று அங்குள்ள வீடுகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் 56-வது வார்டு திமுக வேட்பாளர் மஞ்சுளா தேவிக்கு ஆதரவாக அவரது கணவர் பி.ஆர்.பி பாலசுப்பிரமணியன் வாக்காளர்களிடம் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார்.

அப்போது 56-வது வார்டு திமுக வேட்பாளர் மஞ்சுளாதேவி பேசுகையில்:-இப்பகுதியில் அடிப்படை பிரச்சனைகளான சாலை வசதி, குடிநீர் வசதி தெருவிளக்கு ஆகியவை உடனுக்குடன் சரி செய்யப்படும் என தெரிவித்தார்.

மேலும் இப்பகுதியில் நீண்ட காலமாக உள்ள முக்கிய பிரச்சனையான மழைநீர் தேங்காமல் இருக்க கோரை ஆற்றில் ஷட்டர் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

இந்நிலையில் திருச்சி கருமண்டபம் உட்பட்ட கணபதி நகர், எஸ்எஸ் நகர், ஐஓபி நகர், கோல்டன் நகர், ஓம் சக்தி நகர் பகுதிகளை சேர்ந்த நல சங்கத்தினரிடம் திமுக சார்பில் 56 ஆவது வார்டு பகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மஞ்சுளா தேவிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்து ஆதரவு திரட்டினார்.

அப்போது எஸ் நகர் பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். மேலும் அப்பகுதியில் உள்ள நல சங்கத்தை சேர்ந்த பெண்கள் தங்களின் முழு ஆதரவையும் 56 வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மஞ்சுளா தேவிக்கு தான் எங்கள் வாக்கு என உறுதி கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்