தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேற்று மதுரையில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த நிலையில் இன்று திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நடுவலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்

தமிழக நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே என் நேரு இப்பள்ளியில் பயிலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள 108 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவினை அமைச்சர் இன்று வழங்கினார்..

இதேபோல் திருச்சி மாவட்டத்தில் காலை உணவு திட்டத்தின் மூலம் 81 பள்ளிகளில் 5633 மாணவ மாணவிகள் பயன் பெறுகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி 56வது வார்டு கருமண்டபம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில்

காலை உணவு திட்டத்தை 56-வது வார்டு மாமன்ற உறுப்பினர் PRB. மஞ்சுளாதேவி பாலசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அருகில் வட்டார கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *