திருச்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கான தேர்தல் வருகிற பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் 56-வது வார்டு திமுக வேட்பாளர் மஞ்சுளாதேவி பாலசுப்பிரமணியம் 56-வது வார்டில் செய்யப்பட்ட பணிகள் குறித்தும் மேலும் செய்ய உள்ள பணிகள் குறித்து வாக்காளர்களிடம் எடுத்துரைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக 56 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்கவும், தார் சாலை அமைத்திடவும், கோடை காலங்களில் தங்குதடையின்றி தண்ணீர் கிடைத்திட நடவடிக்கை எடுக்க பாடுபடுவேன் எனவும்,

மேலும் இப்பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன சமுதாயக் கூடம் அமைத்து தரவும், அரசால் அறிவிக்கப்படும் அனைத்து நலத்திட்டங்கள் மக்களுக்கு உடனுக்குடன் கிடைத்திட பாடுபடுவேன் என கூறி கருமண்டபம் புதுத்தெரு பகுதியில் 56-வது திமுக வேட்பாளர் மஞ்சுளாதேவி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அருகில் அவரது கணவர் வட்ட செயலாளர் PRB.பாலசுப்ரமணியன் மற்றும் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர். 56-வது திமுக வேட்பாளர் மஞ்சுளாதேவி வாக்குக் கேட்டு செல்லுமிடமெல்லாம் மக்கள் ஆராத்தி எடுத்து கும்ப மரியாதை கொடுத்து வண்ண வண்ண கோலங்கள் இட்டு வேட்பாளரை மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்