திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை காவிரி பாலம் அருகே 3 திருநங்கைகள் நின்று கொண்டிருக்கையில் ஒரு திருநங்கையை அந்த வழியாக வந்த போலீசார் ஒருவர் தாக்கியதாக கூறப்படுகிறது.

 இதனால் தங்களை தாக்கிய போலீசாரை கைது செய்ய வேண்டும் எனக் கூறி சுமார் 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் திடீரென திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் அந்த வழியாக வந்த வாகனத்தின் மீது ஏறி நின்று குதித்தும் சில திருநங்கைகள் ஆபாசமாக ஆடைகளை களைந்தும் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் திருநங்கைகளை சாலை மறியலை கைவிடுமாறு வலியுறுத்தினர்.

இருப்பினும் தன்னை தாக்கியவர் இங்கு வர வேண்டும் என கோரி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். உண்மையில் திருநங்கைகளை அடித்தது போலீசாரா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து திருச்சி கோட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *