திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள சங்கீத் ஹாலில் ஆடிப்பெருக்கு முன்னிட்டு “எம்ஆர் கார்மெண்ட்ஸ்” என்ற பெயரில் திருப்பூர் ஆடைகள் விற்பனைக் கடை புதிதாக திறக்கப்பட்டது. ஆடைகள் கடை திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

இந்த கண்காட்சி பிரபல கம்பெனியின் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமிகளுக்கான ஆடைகள் உள்ளாடைகள் கைலிகள், பேக், கூலிங் க்ளாஸ், மேட், கம்பெனி செருப்பு வகைகள் உள்ளிட்டவை ரூபாய் 20 முதல் 200 வரை மட்டுமே. இந்த கடையில் குறைந்த விலையில் திருப்பூர் ஆடைகள் மற்றும் பேன்சி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மிகக் குறைந்த விலையில் தரமான ஆடைகள் மற்றும் பொருட்கள் விற்பனைக்காக உள்ளது.

இக்கடையின் உரிமையாளர் ஆனந்தி கமலக்கண்ணன் மற்றும் திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கமலக்கண்ணன் ஆகியோர், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் கடையில் வாங்கும் பொருள்களின் விலைகளுக்கு ஏற்றவாறு பரிசுப்பொருட்கள் அறிவித்தது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *