திருச்சி உறையூர் பாத்திமா நகர் விவேகானந்தா தெருவில் வசித்த கிருஷ்ணன் வயது (65) என்பவர் உய்யக்கொண்டான் ஆற்றின் கரையோரத்தில் தொடர் கனமழையால் தேங்கியிருந்த மழைநீரில் விழுந்து இறந்ததைத் தொடர்ந்து அவரது மனைவி மேரி கிருஷ்ணன் அவர்களிடம் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் உயிர் இழப்பிற்கான மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 4 இலட்சம் நிவாரண நிதிக்கான காசோலையினை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட கலெக்டர் சிவராசு ஆகியோர் இன்று காலை வழங்கினர். மேலும் அப்பகுதியில் மழையினால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் தெருக்களை ஆய்வு செய்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு விரைவாக தேங்கி நிற்கும் தண்ணீரை அப்புறப்படுத்த உத்தரவு பிறப்பித்தார்.

அதனைத் தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்:-

திருச்சி உறையூர் தியாகராய நகர், எஸ்பி நகர், ஜேயுடி நகர் மற்றும் இந்த பகுதிகளில் மழைக்காலங்களில் தண்ணீர் வடியாமல் இந்த மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாக திமுக கழகம் ஆட்சியில் இருந்தபோது காற்றாலைகளும் சாக்கடைகளும் போடப்பட்டது அதற்குப் பின்பாக சாலைகளும் போடப்படவில்லை சாக்கடைகளும் கட்டப்படவில்லை. இந்த முறை வெக்காளி அம்மன் கோவிலிலிருந்து கோரையாறு வரை இருபுறமும் கழிவு நீரோடை கட்டப்பட்டு சாலைகள் சீரமைக்கப்படும். எந்தப் பகுதிகளில் தண்ணீர் அதிகமாக நிற்கிறதோ அங்கு சிமெண்ட் சாலைகள் போடப்படுவதற்கு எஸ்டிமேட் போடப்பட்டுள்ளது. தோராயமாக 18 1/2 ரூபாய் கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் கூடுதலாக செலவானாலும் இந்தப் பகுதியில் காலத்திலும் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்காக நிரந்தரமாக பம்பு செட்டு அமைக்கப்பட உள்ளது. தமிழக முதல்வர் நேற்று ஒரு கூட்டம் கூட்டி இனி மழை காலங்களில் எந்த ஒரு பகுதியிலும் தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கூட்டம் நடத்தி இருக்கிறார். அதுமட்டுமல்ல திருச்சி மாவட்ட ஆட்சியரோடு லால்குடி மணச்சநல்லூர், முசிறி, துறையூர் ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்த போது நிறைய விவசாயிகளின் நிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது.

பருத்தி வீணாகிவிட்டது சோளம் வீணாகிவிட்டது வெங்காயம் வீணாகிவிட்டது. அனைத்தையும் கணக்கெடுத்து விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்வதற்காக திருச்சி மாவட்ட கலெக்டர் அரசுக்கு பரிந்துரை கடிதம் எழுதியிருக்கிறார். அரசு அறிவித்த உடன் அவர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்ட படி அந்தப் பணம் கொண்டு வந்து தரப்படும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் அறிவித்தவுடன் அதனை நடத்த நாங்கள் ரெடியாக உள்ளோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *