தமிழகத்தில் கொரானா தொற்று இரண்டாம் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.கடந்த 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது.ஆனால் பலி எண்ணிக்கை தொடர்ந்தையடுத்து தளர்வில்லா ஊரடங்கை இன்று முதல் தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது, இதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு வேண்டிய காய்கறிகளை நடமாடும் வாகனம் மூலம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி இன்று காலை திருச்சி மாநகராட்சி பகுதிகளில் உள்ள 65 வார்டுகளிலும் அத்தியாவசிய காய்கறிகள் மற்றும் பழங்கள் பானங்கள் விற்பனையை
திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில்
நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்.
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் 535 வாகனங்களும், புறநகர் பகுதிகளுக்கு 500 வாகனங்களும் இயக்கப்பட உள்ளது மேலும் வார்டு ஒன்றுக்கு ஐந்து வாகனம் என்ற எண்ணிக்கையில் விற்பனை நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில்
மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார்
லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன்,
துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின்குமார்,
ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி பழனியாண்டி,
தலைமை பொறியாளர் அமுதவல்லி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *