திருச்சியில் ஸ்டேன் சுவாமி அஸ்திக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளித்தது மற்றும் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் உள்ள அமலா ஆசிரமத்தில் திருப்பணிக்கு அனுமதி அளிக்கப்பட்டதை கண்டித்தும் ஆடி பெருக்கு 18 -ம் நாளான இன்று அம்மா மண்டபம் படித்துறையில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்.

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் காவிரி தாயாருக்கு சீர் கொடுக்கும் நிகழ்ச்சியை வழக்கமான முறைப்படி அம்மா மண்டபம் படித்துறை நடத்த அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஜேபியினர் அம்மாமண்டபம் முன் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் தலைமை தாங்கினார். போராட்டத்தில் மாவட்ட பார்வையாளர் சேது அரவிந்த், ஸ்ரீரங்கம் மண்டல் தலைவர் ஷாலினி, விவசாய அணி மாநில துணைத் தலைவர் கோவிந்தன். மண்டல் தலைவர்கள் மார்க்கெட் சதீஷ், மலைக்கோட்டை மகேந்திரன், பாலக்கரை ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *