திருச்சி மாவட்ட தனியார் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் நலச் சங்கத்தினர் இன்று காலை திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சிவராசுவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது.

திருச்சி மாவட்டத்தில் தனியார் பேருந்துகளில் சுமார் 2000 ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணிபுரிந்து வருகிறோம் . சென்ற கோரோனா காலங்களில் அன்றைய அரசு எங்களுக்கு எந்த ஒரு நிவாரண உதவியோ நிதி உதவியோ எதுவும் வழங்கவில்லை . அன்று முதல் எங்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுளது சென்ற கோரோனாவில் எங்கள் தனியார் பேருந்து முதலாளிகள் அவர்களால் முடிந்த உதவியை செய்தார்கள் .
அதனால் எங்கள் வாழ்வாதரத்தை மிகவும் பின்தங்கிய முறையில் கழித்தோம் . இப்போது புதிதாக பதவி ஏற்ற அரசாவது இன்றைய கொரோனா காலங்களில் எங்கள் குடும்ப வாழ்வாதரங்களை கருத்தில் கொண்டு ஐயா அவர்கள் எங்கள் மனுவை மறு பரிசீலனை செய்து எங்களுக்கு நிவாரன உதவி வழங்க கோரி மனு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *