தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் அலுவலர் சங்கம் சார்பாக மாநில ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலத் தலைவர் பழனிவேலு தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் இதில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் பழனிவேலு கூறியதாவது” அரசு உதவி பெறும் பள்ளிகள் புறக்கணிக்க படுகின்றன . அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கும் அனைத்து உதவிகளையும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்.நீட் தேர்வில் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் நியமனம் பெற்று பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அனைத்து பண பலன்களையும் குறைவின்றி வழங்க வேண்டும்.அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற பட்டது” என்றார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *