திருச்சி கருமண்டபம் சக்தி நகர் 11வது தெருவில் வசித்து வருபவர் துரைராஜ் இவர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பொங்கல் விழாவை கொண்டாட குடும்பத்துடன் பெரம்பலூர் சென்று விட்டு நேற்று இரவு தனது வீட்டிற்கு வந்தார்.

அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் மேலும் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அவரின் படுக்கையறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது அதில் இருந்த 40 சவரன் நகை 50 ஆயிரம் ரூபாய் பணம் சமையல் அறையில் வைத்திருந்த 3 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையர்கள் அள்ளிச்சென்றது தெரியவந்தது.

இது குறித்து கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயின் உதவியோடு அப்பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர் மேலும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *