திருச்சி மேலகல்கண்டார் கோட்டை பகுதியில் நடந்து சென்ற வாலிபர் ஒருவரை அடையாளம் தெரியாத சிலர் வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இதை கண்ட அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடம் வந்த போலீசார். விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் திருச்சி மேல் அம்பிகாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த வாலிபர் ரிஷி வயது 19 என்பதும், பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் படுகொலை செய்யப்பட்ட வாலிபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *