திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த சின்னவேலகான நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் . இவரது மகள் தேஜாஸ்ரீ ( வயது 7 ) . இவர் முசிறி பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 3 – ம் வகுப்பு படித்து வந்தார் . கடந்த 16.12.2017 – ந் தேதியன்று வீட்டில் இருந்து வேனில் பள்ளிக்கு புறப்பட்டு சென்றார் . அப்போது முசிறி காமாட்சிப்பட்டி ரோடு அருகே வந்த போது வேன் கட்டுப்பாடு இழந்து கவிழ்ந்தது . இந்த விபத்தில் தேஜாஸ்ரீ படுகாயமடைந்து இறந்தார் . இந்த சம்பவம் குறித்து அப்போது முசிறியில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ஜெயசித்ரா வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தார் . இந்நிலையில் இந்த வழக்கு திருச்சி முதலாவது சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது . இந்த வழக்கு தொடர்பாக நேற்று இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா நேரில் ஆஜராகி சாட்சி அளிப்பதாக இருந்தது . ஆனால் அவர் நேற்று நேரில் ஆஜராகவில்லை . இது குறித்து நீதிபதி வேதியப்பன் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ராவிற்கு சாட்சி பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார் . தற்போது ஜெயசித்ரா பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *