திருச்சி மாவட்டம், லால்குடி சந்தைப் பேட்டை பகுதியில் அமைந்துள்ள தனியார் கூட்ட அரங்கில் பாங்க் ஆப் பரோடா வங்கி சார்பில் விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு விவசாய வசந்தகால கடன் வழங்கும் விழா நடைபெற்றது.ரூ. 6 கோடியே 25 லட்சம் கடன் வழங்கினர்.

 பாங்க் ஆப் பரோடா வங்கி திருச்சி மண்டலம் சார்பில் நடைபெற்ற இவ் விழாவிற்கு பாங்க் ஆப் பரோடா திருச்சி துணை பிராந்திய மேலாளர் ரவிச்சந்திரா தலைமை வகித்தார்.

விழாவில் திருச்சி , லால்குடி, மண்ணச்சநல்லூர், குழுமணி, மேட்டுப்பாளையம், ஏர்ப்போட், ஜம்புநாதபுரம் ஆகிய பகுதியில் உள்ள வங்கி கிளை மேலாளர்கள் எல்லைக்குட்பட்ட விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர்கள் 82 பேருக்கு ரூ. 6 கோடியே 25 லட்சம் கடன் உதவித் தொகையினை வழங்கி பேசினார்.       

விழாவில் பாங்க் ஆப் பரோடா வங்கி திருச்சி சாலை ரோடு கிளையின் முதன்மை மேலாளர் காமராஜ், லால்குடி முதுநிலை மேலாளர் சுரேஷ்,

வேளாண்மை துறை உதவி இயக்குநர் சுகுமார், கோத்தாரி சர்க்கரை ஆலையின் நிதித்துறைத் தலைவர் பெலிக்ஸ், திருச்சி மகளிர் திட்ட துணை அலுவலர் நிர்மலா மற்றும் விவசாயிகள் , மகளிர் சுய உதவிக்குழுவினர்கள் திரளாக பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *