இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை ஏற்றத்தை கண்டித்து பல்வேறு கட்சியினர், அமைப்பினர் தொடர்ந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் மக்கள் நீதி மையத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி சிந்தாமணி அண்ணாசாலையில் மத்திய மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு உடனடியாக பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் வலியை குறைக்க வேண்டும், மேலும் அனைத்து பொருட்களும் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைச் செயலாளர் சதீஷ்குமார், நிர்வாகிகள் சாம்சன், மாவட்ட பொருளாளர் கிஷோர், சங்கர், மகாராஜா, சகுபர்சாதிக் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *