பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா மாநிலம் தழுவிய அளவில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் தலைமை தபால் நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதற்கு திருச்சி தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் தமீம் அன்சாரி அவர்கள் தலைமையேற்றி நடத்தினார்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக திருச்சி மண்டல தலைவர் இமாம் ஹஸ்ஸான் பைஜி, SDTU தொழிற்சங்கம் மாநில செயலாளர் முஹம்மது ரபீக், SDPI வர்த்தகர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் சாதிக், SDTU தொழிற்சங்கம் திருச்சி மாவட்ட தலைவர் முஸ்தபா,திருச்சி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான்

SDPI கட்சி மாவட்ட செயலாளர்கள் ஏர்போர்ட் மஜீத், மதர் ஜமால், மாவட்ட பொருளாலர் சுஹைப், மாவட்ட செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர். தொகுதி, கிளை நிர்வாகிகளும்,அணி நிர்வாகிகளும் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் 100க்கும் மேற்பட்டோர் கைதும் செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *