திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி 8-வது வார்டு பகுதியில் உள்ள மகளீர் சுய உதவி குழு பெண்களுக்கு சுய தொழில் பயிற்சியாக இயற்கை உரமான பஞ்சகவ்யா எப்படி தயாரிப்பது என்பது குறித்த பயிற்சி விளக்க கூட்டம் நடைபெற்றது.

இந்த பயிற்சி வகுப்பில் அழகு கலை நிபுனரும், முங்கில் கைவினை பொருட்கள் விற்பனை மையத்தின் நிர்வாகியும், SAFE TRUST – தலைவருமான திருநங்கை காஜல் மகளீர் சுய உதவி குழு பெண்களுக்கு இயற்கை உரமான பஞ்சகவ்யா தயாரிக்கும் முறை பற்றி செய்து காண்பித்தார்.

மேலும் பஞ்சகவ்யாவில் அனைத்து பேரூட்டச் சத்துக்களும், நுண்ணுயிர் சத்துக்களும், பயிர் வளர்ச்சி ஊக்கிகளும், மிகுந்த அளவில் உள்ளன. 75% உரமாகவும் 25% பூச்சி மற்றும் நோய்க்கொல்லி மருந்தாகவும், வேலை செய்கிறது. என்பது பற்றி எடுத்துக் கூறினார்.

இந்த சுய தொழில் பயிற்சி வகுப்பிற்கான எற்பாடுகளை பிஷப் ஹீபர் கல்லூரியின் எம்.எஸ்.டபுள்யூ மாணவர் அஜய் செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்