திருச்சி பெண்கள் மத்திய சிறையில் பெண் கைதி சத்யா தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டதில் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் கைதிகளான சத்யா, சாந்தி மற்றும் ரோஸ்லின் ஆகியோர் கடந்த சில நாட்களாக பெண்கள் சிறையில் சில தவறான செயல்களில் ஈடுபட்ட வந்தாக கூறப்படுகிறது.

 

அதனால் சிறைக் பெண் காவலர்கள் பெண் கைதிகளான 3 பேரையும் தனிமைப் படுத்தி வைத்துள்ளனர். இதில் மனமுடைந்த சத்யா இன்று மனநோயாளிகளுக்கு அளிக்கும் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

 

மேலும் மயங்கிய நிலையில் இருந்த பெண் கைதி சத்யாவை போலீசார் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

தற்போது பெண் கைதி தற்கொலை முயற்சி சம்பவம், திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்