திருச்சி கண்டோன்மெண்ட் ஒத்தகடை பகுதியில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னரின் திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் இரண்டாம் ஆண்டு அபிஷேக ஆராதனை பெருவிழாவை நடைபெற்றது.

மேலும் உலக மக்கள் நலனினை வேண்டி குடமுருட்டி காவிரி ஆற்றில் அய்யாளம்மன் படித்துறையில் இருந்து பால்குடம் மற்றும் தீர்த்த குடம் கொண்டுவரப்பட்டு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னருக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *