திமுக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பு, தேங்காய், வெல்லம் ஆகியவற்றை சேர்த்து வழங்கக்கோரி பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகர மாவட்ட செயலாளர் காளீஸ்வரன் உள்பட 100 க்கும் மேற்பட்டோர் கையில் கரும்புகளை ஏந்தியபடி கலந்து கொண்டு கண்டன கோசங்களை எழுப்பினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *