திருச்சி மாநகர காவல்துறை சார்பாக சிறப்பான பணிகளை செய்வோர்கள் கண்டறியப்பட்டு, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் நேரில் அழைத்து பாராட்டி பணிப்பாராட்டு சான்றிதழ் வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தலைமை தபால்நிலையம் பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த கண்டோண்மென்ட் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு முதல்நிலைக்காவலர் 466 ஜலாலுதீன் என்பவர் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமலும், சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிகளை கடைபிடிப்பதன் அவசியத்தையும், கொரோனா நோய்தொற்று பற்றி விழிப்புணர்வு மற்றும் அவசர வாகனங்கள் வழிவிடுதலின் அவசியம் பற்றி பொதுமக்களுக்கு புரியும்படி எளிமையான நடையில் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது பொதுமக்களிடையே நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது பணியை பாராட்டி திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் நேரில் அழைத்து பணிப்பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்