திருச்சி போலீஸ் கமிஷ்னர் கார்த்திகேயன் திருச்சி மக்களின் நலன்கருதியும் , வாகன ஓட்டிகள் வசதிகேற்ப சாலை போக்குவரத்தில் பல மாறுதல்கள் செய்தும் , விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார் . கடந்த 5 வருடங்களாக கரூர் பைபாஸ் சாலை , சாஸ்திரிரோடு வழியாக மத்திய பேருந்து நிலையம் வரும் புறநகர் பேருந்துகள் அனைத்தும் உக்கிரகாளியம்மன் கோவில் அண்ணாநகர் , ஸ்டூடன்ட் ( Student ) சாலை , MGR சிலை , நீதிமன்றம் , வ.உ.சி சிலை , மாநகர காவல் கட்டுப்பாட்டு அறை , ரெனால்ட்ஸ் ரோடு வழியாக மத்திய பேருந்து நிலையத்திற்கு சுற்றி சென்றுகொண்டிருக்கின்றன .

காவல் ஆணையர் அவர்கள் நேற்று 20.12.21 ந்தேதி போக்குவரத்து சீரமைப்பு சம்மந்தமாக MGR சிலை அருகே போக்குவரத்து வழித்தடத்தை பார்வையிட்டு , நீதிமன்றம் வழியாக சுற்றி சென்று கொண்டிருந்த புறநகர் பேருந்துகள் மற்றும் வாகனங்களை , MGR சிலை ரவுண்டானா , ஐயப்பன்கோவில் , லாசன்ஸ் ரோடு , வெஸ்டரி பள்ளி ரவுண்டானா வழியாக நேரடியாக மத்திய பேருந்து நிலையம் சென்றடைய பொதுமக்கள் நலன்கருதி போக்குவரத்து வழித்தடம் மாற்றம் செய்து ஆணையிட்டார்கள் . மேற்கண்ட போக்குவரத்து வழித்தடம் மாற்றத்திற்கு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது .

 மேலும் காவல் ஆணையர் அலுவகத்தில் காவல்துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்களின் குழந்தைகள் 11 நபர்களுக்கு கல்வி உதவி தொகையும் , 43 காவல் ஆளிநர்களின் குடும்பங்களுக்கு இறுதிசடங்கு உதவி தொகை‌ வழங்கினார். மேலும் காவலரின் குடும்பங்களுக்கிடையே பேசுகையில் , ” எல்லா குழந்தைகளும் நன்றாக படிக்கவேண்டும் எனவும் , கடமையும் முக்கியம் , குடும்பமும் முக்கியம் எனவும் , கடமையும் குடும்பவும் இருகண்களாக பார்க்கவேண்டும் ” என அறிவுரைகள் வழங்கி , காவலரின் குழந்தைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *