போலியான இணையத்தளங்களில் மருந்து விற்பனை செய்யப்படுவதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஊரடங்கு காலத்தில் கொரோனா மற்றும் கருப்பு பூஞ்சை நோய்களுக்கான அத்தியாவசிய மருந்து விற்பனை செய்வதாக இணையவழி மூலம் குற்றவாளிகள் போலியான வலைத்தளங்களை உருவாக்கி பிரபல சந்தை இணையத்தளங்களில் ( indiamart.com ) ) பதிவேற்றம் செய்துள்ளனர் .

அவ்வலைப்பக்கத்தை தொடர்புக் கொள்வோரின் பணம் மற்றும் சுயவிபரங்கள் திருடப்படுகின்றன. எனவே மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்துகளை யாறும் வாங்க வேண்டாம் என திருச்சி மாநகர காவல் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர் மேலும் இதுகுறித்து புகார்களை இந்த இணையதளத்தில் https://cybercrime.gov.in அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *