திருச்சி கோமங்கலம், பெருமாம்பட்டி, கொச்சடிப் பள்ளம் மற்றும் மேட்டுக் காடு ஆகிய கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு இப்பகுதியில் மா, கொய்யா, முருங்கை ஆலமரம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட செடிகள் மற்றும் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் கிளைச் செயலாளர் தங்கராஜ், பால்ராஜ், கார்த்தி, இளையராஜா, ஆதி, விக்னேஷ், ஆனந்தராஜ், உமா, கந்தசாமி, கலைச்செல்வி, கோகிலா, செல்வம், வடிவேல், கலைச்செல்வி, கோகிலா ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக கிராம சுகாதார ஆய்வாளர் மாரிக்கண்ணு கலந்து கொண்டார். இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் செல்லக்குட்டி செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *