மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்தும் பொதுத்துறை நிறுவனங்களை மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்க வலியுறுத்தியும் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஜவஹர்லால் நேரு பிறந்த தினமான இன்று சேவா சங்கம் பெண்கள் பள்ளி எதிரில் உள்ள ஜவர்லால் நேரு சிலை முன் இருந்து இரு சக்கர விழிப்புணர்வு பேரணி புறப்பட்டு ஸ்ரீரங்கம் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இருசக்கர பேரணிக்கு போலீசார் அனுமதி தர மறுத்ததை அடுத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியூ மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார்.

முன்னதாக மறைந்த பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஆர்ப்பாட்டத்தை விளக்கி பிஎஸ்என்எல் இயூ அஸ்லாம் பாஷா, ஏ ஐ ஐ இஏ ரமேஷ்குமார், பி இ எப்ஐ மணிவண்ணன், சந்தானம், என்எல்பி இ கிருஷ்ணமூர்த்தி டி ஆர் இ யூ மகேந்திரன் மற்றும் லிகாய், டிஎன்ஜி இஏ, போஸ்டல் தொழிற்சங்க நிர்வாகிகள் பேசினர். இதில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *