மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் திகுன்னியா அருகில் பன்வீர்பூர்-ரில் விவசாயிகளை கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும், மழையினால் அழிந்த விவசாய பயிர்களுக்கு உரிய நஷ்டயீடு வழங்க வேண்டும்,

தமிழகத்தில் உர தட்டுப்பாடு நீக்க உடனாக மத்திய அரசு உரம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சியில் கடந்த 12.10.2021 முதல் வருகிற 26.11.2021 வரை 46 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து பல்வேறு கட்ட நூதன முறையில் உண்ணாவிரத போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக 38-ம் நாளான இன்று காலியான உரச்சாக்கை(சாக்கு) விவசாயிகள் தங்கள் கால்களில் மாட்டிக்கொண்டு நூதன உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்..

இந்தப் போராட்டத்தில் மாநில துணை தலைவர்கள் மேகராஜன், கரூர் தட்சிணாமூர்த்தி, சிறுகாம்பூர் பரமசிவம், மாநில செயலாளர்கள் நகர் ஜான் மெல்கியராஜ், லால்குடி தியாகு,மாநில துணை சட்ட ஆலோசகர் முத்துசாமி, மாநில செய்தி தொடர்பாளர்கள் தீராம்பாளையம் பிரேம்குமார், வரப்பிரஹாஸ், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் இராமலிங்கம், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *