திருச்சி தெற்கு மாவட்ட திமுக மலைக்கோட்டை பகுதியில் சார்பாக முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் கலைஞர் அறிவாலயம் அருகில் உள்ள விடிவெள்ளி ஆசிரமத்தில் வைக்கப்பட்டிருந்த முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் திருவுருவ படத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து அங்கு உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி காலை உணவை மலைக்கோட்டை பகுதி கழகம் சார்பாக குழந்தைகளுக்கு வழங்கினார். நிகழ்வில் கோவிந்தராஜன் மலைக்கோட்டை பகுதி கழக செயலாளர் மதிவாணன் மற்றும் வட்ட கிளை கழக நிர்வாகிகள் பகுதி கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *