அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர், இதய தெய்வம் “பாரத ரத்னா”, புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இன்று காலை ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அதிமுக கட்சி நிர்வாகிகள் சார்பில் சோமரசம் பேட்டையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி, முன்னாள் அமைச்சர்கள் கு.ப.கிருஷ்ணன், கே.கே.பாலசுப்ரமணியன், வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு புரட்சித் தலைவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கினார்கள்‌. நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, கிளை, வார்டு கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *