திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவிலில் இன்று காலை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொள்ள வருகை தந்தார் முன்னதாக மலைக்கோட்டை கீழே உள்ள மாணிக்க விநாயகர் சன்னிதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு உச்சிப் பிள்ளையாரை தரிசனம் செய்ய மேலே சென்று ரோப் கார் அமைக்கும் பணிக்கானஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர் பேட்டி அளித்த அமைச்சர் சேகர்பாபு
தமிழக தேர்தலின்போது தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் 5 கோயில்களில் ரோப்கா அமைக்கப்படும் என தெரிவித்திருந்தோம் அதன்படி தமிழகத்தில் மலைக்கோட்டை உட்பட ஐந்து கோவிலில் ரோப்கார் அமைப்பதற்கான ஆய்வு செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறேன். இரண்டாவது கோயிலாக இன்று மலைக்கோட்டை ஆய்வு செய்துள்ளது கள ஆய்வு முடிந்த பின்னர் முடிவுகளை தமிழக முதல்வரிடம் கொடுத்த பின்னர் அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்.தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் தமிழகத்தில் கொரோனா குறைந்து கொண்டு வருகிறது. கொரோனா ஓரிரு வாரங்களில் முழுமையாக குறையும் எனவும், அதனை பொருத்து தமிழகத்தில் உள்ள கோயில்கள் திறக்கப்படும்.இந்துக்களின் முறைவழிப்படு எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் 1956 ம் ஆண்டு சட்டப்படி இந்து அறநிலைய துறை தலையிடலாம் என சட்டம் சொல்கிறது என கூறினார்.இந்த ஆய்வின் போது ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, சமயபுரம் இனை ஆணையர் கல்யாணி, மலைக்கோட்டை கோயில் உதவி ஆணையர்விஜயராணி ஆகியோர் உடனிருந்தனர்.