பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, அவர்கள் படிக்கும் பள்ளியிலேயே, தங்களுக்கான ஆதார் அட்டையை பதிவு செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில், திருச்சி பீமநகர் பகுதியில் உள்ள, மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்யும் பணியினையும், வங்கி கணக்கு, அஞ்சலக சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கான பணியினையும், நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், மாநகராட்சி மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *