திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வாகன ஓட்டிகளுக்கும், போக்குவரத்துக்கும் மற்றும் நடைபாதை மக்களுக்கும் இடையூறாக தரைக்கடைகள் செயல்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையருக்கு பொது மக்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்ததை தொடர்ந்து. பெரியசாமி டவர், சத்திரம் பேருந்து நிலையம், சிங்காரத்தோப்பு, சிந்தாமணி பஜார், காளியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட தரைக்கடைகள், தள்ளுவண்டி மற்றும் பெட்டி கடைகளை திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் உத்தரவின் பேரில் மாநகராட்சி உதவி ஆணையர் ரவி தலைமையில்

மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் பெரியசாமி தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி ஊழியர்கள் இன்று காலை முதல் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்பின் போது மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் இளநிலை பொறியாளர் கணேஷ் பாபு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இந்நிலையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள எஸ் வி ஆர் ரெடிமேட்ஸ் கடை சார்பாக போடப்பட்டிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பேன்சி பொருட்கள் விற்பனை பெட்டிக்கடையை மாநகராட்சி ஊழியர்கள் அகற்ற முற்பட்டபோது. எஸ் வி ஆர் ரெடிமேட் கடையின் ஊழியர்கள் மாநகராட்சி உதவி ஆணையர் ரவி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்களை ஒருமையில் பேசினர்.

மேலும் மாநகராட்சி அதிகாரிகளை பார்த்து இது யாருடைய கடை என தெரியுமா? எஸ் வி ஆரின் கடை என கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டு மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை தாக்க முற்பட்டனர். இதனால் இரு பிரிவினரிடையே. தள்ளுமுள்ளு ஏற்பட்டது உடனடியாக அருகில் இருந்த போலீசார் இரு தரப்பு ஊழியர்களையும் விளக்கி விட்டனர்.

அதனை தொடர்ந்து ஜேசிபி எந்திரம் மூலம் எஸ்.வி.ஆர் ரெடிமேட் சார்பில் சாலையில் போடப்பட்டிருந்த பெட்டி கடை இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *