திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அடுத்துள்ள மலைப்பட்டி கல்குவாரி ஒன்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்றுமிதப்பதாக அப்பகுதி பொது மக்கள் சோமரசம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் பிணமாக கண்டெடுத்த நபர் மலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் ( 46) என்பதும் கடந்த மூன்று நாட்கள் முன்பு இவர் காணவில்லை என சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் கொடுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் மயமான பிரகாஷை தேடி வந்த நிலையில் இன்று காலை மலையபட்டி கல்குவாரி அருகே குட்டையில் பிணமாக அவரை காவல்துறையினர் மீட்டுள்ளனர். தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பிணமாக மீட்கப்பட்ட பிரகாஷ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அடித்துக் கொலை செய்து கல்குவாரியில் வீசிவிட்டு சென்றனரா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மாயமாணவர் கல்குவாரியில் பிணமாக கண்ட சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *