திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நலச்சங்கம் மற்றும் தன்னார்வ சேவை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ரூ.10,000/- மதிப்பிலான அரிசி மற்றும் மளிகை பொருட்களை மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்வில். சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் செல்வம், துணை ஆட்சியர் நிலம் எடுப்பு முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) ஏழுமலை, உதவி ஆணையர்(கலால்) ரெங்கசாமி. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்