மேட்டூர் அணையிலிருந்து வீராணம் ஏரிக்காக திறக்கப்படும் தண்ணீர் முக்கொம்பு மேலணையில் உள்ள காவிரி கதவணை வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் காவிரி கதவணையில் உள்ள ஷட்டர்களில் நடைபெற்று வரும் புணரமைப்பு பணிகள் உடனடியாக முடிக்கப்பட வேண்டி உள்ளதால் நேற்று முக்கொம்பு மேலணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் 2000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

முன்னதாக திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் உத்தரவுபடி கொள்ளிட கரையோர மக்கள் குளிக்கவோ துணிதுவைக்கவோ கால்நடைகளை கொள்ளிடம் ஆற்றில் ஓட்டிச்செல்லவோ வேண்டாம் அறிவிப்பு வெளியிடப் பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *