திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த தொட்டியம் அருகே திருநாராயணபுரம் அருள்மிகு வேதநாராயண பெருமாள் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு பகல் பத்து, இரா பத்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பகல் பத்து நிகழ்ச்சி நடைபெற்று இன்று முக்கிய நாளான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதிகாலை சொர்க்கவாசல் கதவு திறக்கப்பட்டது .பக்தர்கள் ரங்கா ரங்கா கோவிந்தா என பக்திப் பெருக்கோடு கோசம் எழுப்பினர்.

அப்போது அருள்மிகு வேதநாராயணப் பெருமாள்,உப நாச்சியார்களுடன் சொர்க்கவாசல் வழியாக வந்து ஆல்வார்களுக்கு எதிர்சேவை அளித்தார். அப்போது பாசுரங்கள் பாடபட்டது.

பின்னர் பெருமாள் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பத்தர்களுக்கு சேவை சாதித்து அருளினார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பான ஏற்பாடுகளை தொட்டியம் காவல் ஆய்வாளர் முத்தையன் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர்கள் செந்தில்குமார் ஆறுமுகம் முருகேசன் பரசுராமன் மற்றும் 20க்கும்மேற்பட்ட போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்