சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு ரஜினிகாந்த் பேட்டியளித்தார்.

அப்போது, கொரோனாவை ஒழிக்க தமிழக அரசின் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளுக்கும் மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். மேலும், அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.முன்னதாக, ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா மற்றும் அவரது கணவர் கொரோனா நிவாரண நிதியாக ஒரூ கோடி ரூபாய் கொடுத்தனர்.சமீபத்தில், ஹைதராபாத்தில் நடைபெற்ற ‘அண்ணத்த’ படத்தின் ஷூட்டிங்கை முடித்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *