கடந்த 2018 – 2021ம் ஆண்டு முதுநிலை படிப்பு காலம் முடிந்த பிறகும் முதுநிலை மருத்துவ மாணவர்களை பயிற்சி மருத்துவர்களாகவே நீடிக்க செய்யும் தமிழக அரசின் முடிவை திரும்ப பெற வலியுறுத்தி திருச்சியில் முதுநிலை பயிற்சி மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.
![](https://tamilmuzhakkam.com/wp-content/uploads/2021/06/Photo_1622532693796_40.jpg)
1. பட்டமேற்படிப்பு காலத்தினை நீட்டிப்பு செய்திடாமல் அனைத்து அரசு சாரா பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களை முதுநிலை குடியிருப்பு மருத்துவர்களாக (SENIOR RESIDENT) / அரசு உதவி மருத்துவராக (ASSISTANT SURGEON) கலந்தாய்வு மூலம் பணி நியமனம் செய்ய வேண்டும்.
2.அந்தப் பணிக்காலத்தை அவர்தம் முதுநிலை குடியிருப்பு பணிக் காலத்தில் சேர்த்தும்; அதற்கேற்ப ஊதியத் தொகையும் சலுகைகளும் வழங்கிடவும் வலியுறுத்துகிறோம்.
3. கொரோனா காலப் பணியை 2 வருட கட்டாய சேவைக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
![](https://tamilmuzhakkam.com/wp-content/uploads/2021/06/Photo_1622532694409_40.jpg)
5. மேலும் இறுதியாண்டு தேர்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், தேர்வு நடத்தும் சூழல் ஏற்படுமாயின் குறைந்தது 4 வாரங்கள் முன்னதாக தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள இறுதியாண்டு அரசு சாரா பட்ட மேற்படிப்பு மாணவர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.