திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் வெள்ளாளர் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோயில் புறனமைகப்பட்டு கும்பாபிஷேகம் நடத்துவதற்காக பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கடந்த 4ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை தொடங்கியது ஆறு கால யாகசாலை நடைபெற்று.

 இன்று காலை 9 மணிக்கு மேல் கடங்கல் புறப்பட்டது. அதனை தொடர்ந்து 9.30 மணியளவில் கோவில் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்கள் மீது புனித நீர் தெளிக்கபட்டது…

 

தொடர்ந்து சக்தி மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது… இந்த விழாவிற்கு திருச்சி மாவட்டத்திலிருந்து பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *