வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி மக்கள் அதிகாரம் சார்பாக திருச்சியில் நடக்கவிருக்கும் ரயில் நிலைய முற்றுகைப் போராட்டத்தை விளக்கி திருச்சியில் நோட்டீஸ் பிரச்சாரம் செய்யப்பட்டது.

மத்திய அரசு கார்பரேட் முதலாளிகளுக்கு சுதந்திரம் வழங்கி, அவர்களை எதிர்ப்பவர்களுக்கு சிறையில் அடைப்பதை கண்டித்தும், ஊபா சட்டம், ..என்.ஐ.ஏ. சட்டம், 124A ஆகிய சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்,

இச்சட்டங்களில் கைதான சமூக செயற்பாட்டாளர்கள் 15 பேர் உட்பட அனைவரையும் விடுதலை செய்ய கோரி இந்த முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. இதனை விளக்கும் வகையில் மக்கள் அதிகாரம் சார்பாக நேற்று ரயில் நிலையம் அருகே வாகனப்பிரச்சாரம் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *