திங்கட்கிழமை முதல் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட உள்ள நிலையில், டாஸ்மாக் கடைகள் முழுவதுமாக செயற்படாது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் திருச்சியில் உள்ள மதுபான கடைகளில் மது வாங்க மது குடிப்போரின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை 183 டாஸ்மாக் கடைகளும், 4 எலைட் கடைகளும் உள்ள நிலையில் இரண்டு வார பொது முடக்கத்தின் போது டாஸ்மாக் கடைகள் செயல்படாது என்பதால் பெருமளவில் மது பாட்டில்களை வாங்குவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களாக காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் செயல்படும் என்பதால் டாஸ்மாக் கடைகளில் 11.30 மணி முதல் 12 மணி வரை அதிக அளவிலான கூட்டம் காணப்பட்டது. இந்த நிலையில் இன்றும் 12 மணிக்கே மூடிவிடும் என்று பலரும் டாஸ்மாக் கடையில் குவிந்தனர்.

இரண்டு வாரம் பொது முடக்கம் என்பதால் தேவையான மதுபாட்டில்களை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதால் திருச்சி புத்தூர் சிந்தாமணி வளாகத்தில் உள்ள எலைட் மதுபான கடை முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை பெட்டி பெட்டியாக வாங்கி சென்றனர். பெரும்பாலானோர் முக கவசம் அணிந்திருந்த நிலையில் தனிமனித இடைவெளி என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. பெரிய அளவிலான பைகளுடனும், பெட்டிகளுடன் நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *