1999 ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் எதிரிகள் நால்வரை நேருக்கு நேர் சுட்டு வீழ்த்தி, அவர்களது இரண்டு முகாம்களை தனது ஏவுகணையால் தாக்கி அவற்றை முழுவதும் அழித்துவிட்டு பின்னர் முதல் ராணுவ அதிகாரியாக வீர மரணம் அடைந்தவர் நமது திருச்சியை சேர்ந்த மேஜர் சரவணன், அவரது வீர தீர செயல்களை பாராட்டி இந்திய அரசு பாட்டலிக்கின் கதாநாயகன் என்றும் நம் நாட்டின் உயரிய விருதான வீர் சக்கரா என்ற விருதையும் வழங்கி கௌரவித்தது.

அவரது 25 ஆம் ஆண்டு நினைவு விழாவை முன்னிட்டு ஜான் வெஸ்ட்ரி பள்ளி எதிரே உள்ள மேஜர் சரவணன் நினைவிடத்தில்மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் அதனைத் தொடர்ந்து திருச்சி மாநகராட்சி ராணுவ அதிகாரிகள் .மாநகராட்சி ஆணையர் சரவணன், உட்பட அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டர் அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து மேஜர் சரவணன் நினைவு அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் செந்தில்குமார் கூறுகையில்:- இந்திய நாட்டிற்காக உயிர்நீத்த கார்கில் வீரர் மேஜர் சரவணன் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. மேலும் மேஜர் சரவணன் நினைவிடத்தில் 56 அடி உயர தேசியக்கொடி நிறுவதற்கான அனுமதி கூறியுள்ளோம் அனுமதி கிடைத்தவுடன் வருகிற ஜூலை 26 ஆம் தேதி 24 மணி நேரமும் பறக்கக்கூடிய தேசியக் கொடியை திறக்க உள்ளோம் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *