மோடி பதவியேற்று ஏழு ஆண்டுகள் நிறைவடைகிறது. பதவி ஏற்ற நாளை கருப்பு தினமாக அனுசரித்து இந்தியா முழுவதும் விவசாயிகள்அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.அதன் படி அகில இந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக திருச்சி மாவட்ட மக்கள் அதிகாரம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் மண்டல ஒருங்கிணைப்பாளர் செழியன் தலைமையில்தில்லைநகர், காந்திபுரம் பகுதியில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில்கார்ப்பரேட் கைக்கூலி மோடியே பதவி விலகு, மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விடியோ சிஸ்டர் சங்கத்தின் சார்பில் வழக்கறிஞர்கள் ரஞ்சித் ,ரகு விடுதலை ,சரவணன் விஜய் செல்வம் ,அன்பு மற்றும் மக்கள் அதிகாரம் சார்பில் ஒருங்கிணைப்பாளராஜா, செந்தில், சிவா, தமிழ் புலிகள் மாவட்ட செயலாளர் ரமணா உட்பட பலர் கலந்து கொண்டனர்.