திரைப்பட நடிகர் ரஜினிகாந்த்தின் 72-வது பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர்கள் அன்னதானம், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்து கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் நகர தலைமை ரஜினி ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் ரஜினிகாந்த் நீடூழி வாழ வேண்டி ஸ்ரீரங்கம் ராகவேந்திரா கோவிலில் வெள்ளித்தேரை ஸ்ரீரங்கம் நகர தலைமை ரஜினி ரசிகர் நற்பணி மன்ற மாவட்ட செயலாளர் கலீல் தலைமையில் ரசிகர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.‌

அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் நகர தலைமை ரஜினி ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகிகள் சுதர்ஷன், கர்ணன் பாலன், ராயல்ராஜ், ரெங்கராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *