தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் நேரத்தின் போது திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் வெளியிட்ட அறிவிப்பில் திமுக வெற்றி பெற்றால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பொது மக்களுக்கு ரூபாய் 4000 வழங்கப்படும் என அறிவித்தார்… இதனை தொடர்ந்து வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்ற பின் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் முதல் தவணையாக கடந்த மேமாதம் 2000 ரூபாய் பொதுமக்கள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டாம் தவணையாக ரூபாய் 2000 இம்மாதம் 15ஆம் தேதி வழங்கப்படும் என அறிவித்ததை தொடர்ந்து .இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சிவராசு தலைமையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு இரண்டாவது தவணையாக ரூபாய் 2000 வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து அதனுடன் 14 வகையான இலவச மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் பொதுமக்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி N. சிவா ,பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், சட்டமன்ற உறுப்பினர்கள் லால்குடி சௌந்தரபாண்டியன், துறையூர் ஸ்டாலின் குமார், முசிறி காடுவெட்டி தியாகராஜன் ,ஸ்ரீரங்கம் பழனியாண்டி,மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், கூட்டுறவு துறை இணைப்பதிவாளர் அருளரசு ,மாவட்ட வழங்கல் அலுவலர் அன்பழகன் ,தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் சிற்றரசு , மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி,மாநகரச் செயலாளர் அன்பழகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *