வங்கி எழுத்தர் பணிக்கு தமிழில் தேர்ச்சி கட்டாயமில்லை என்கிற அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே, பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் வட மாநிலத்தவருக்கே வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில் வங்கி எழுத்தர் தேர்வுக்கு தமிழில் தேர்ச்சி பெறுவது கட்டாயமில்லை என்கிற அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது என்பது தமிழ்நாடு இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் ஒன்றிய அரசின் சதி செயல் தான்.

இது போன்ற அறிவிப்புகள் என்பதை குற்றம்சாட்டியும் இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்தும் திராவிடர் கழகம் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் மாணவர் கழக செயலாளர் பிரின்ஸ் என்னாரஸ் பெரியார் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத்தினர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த அறிவிப்பை திரும்ப பெறும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *