திருச்சி ரயில்வே ஜங்ஷன் பகுதியில் நேற்று விடியற்காலை ரயில்வே பாதுகாப்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொழுது. ரயில் நிலைய முதலாம் நடைமேடை பகுதியில் சிறுவன் ஒருவன் நீண்ட நேரமாக சுற்றித் திரிந்து கொண்டிருந்தான். இதைக்கண்ட ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சிறுவனை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தனது பெயர் சங்கர் துக்காராம் ஷிண்டே என்பதும், தனது வயது 14 எனவும், தான் மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தை சேர்ந்தவர் துல்கர் என்பவரின் மகன் என மராட்டிய மொழியில் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் பெற்றோரின் தொலைபேசி எண் தெரியாததாலும், சிறுவன் பேசும் மராட்டிய மொழி இங்குள்ள போலீசாருக்கு தெரியாததால் சிறுவனை உடனடியாக ரயில் நிலைய வளாகத்தில் உள்ள குழந்தைகள் உதவி மையத்தில் ஒப்படைத்தனர். காவல் நிலையம் தொடர்ந்து திருச்சி ஜங்ஷன் ஆர்பிஐ போலீசார் மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்திலுள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *