திருச்சி மாநகரில் வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சி தில்லைநகர், கன்டோன்மென்ட், மத்திய பஸ் நிலையம், கேகே நகர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில் சோமரசம்பேட்டையை சேர்ந்த பார்த்திபன், உய்யகொண்டான் திருமலை சேர்ந்த பிரகாஷ் குமார், அல்லி துறையைச் சேர்ந்த கார்த்திகேயன் ஆகிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஐந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் ஐந்து இடங்களில் ஐந்து பேரிடம் மிரட்டி செல்போன்களை பறித்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் வேறு எங்கேனும் கைவரிசை காட்டி உள்ளனரா? என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்