திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் வயது (42). இவர் தனது குடும்பத்தினருடன் கரூர் தாந்தோன்றிமலையில் சாமி கும்பிடுவதற்காக எடமலைப்பட்டி புதூரில் இருந்து டூரிஸ்ட் வேன் மூலம் தனது உறவினர்களுடன் திருச்சியிலிருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் முக்கொம்பு அருகே டூரிஸ்ட் வாகனத்தை மினி கண்டெய்னர் லாரி முந்திச் செல்வதற்காக முற்பட்டபோது எதிரே கரூரில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பஸ் மினி கண்டெய்னர் லாரி மற்றும் டூரிஸ்ட் வேன் ஆகியவை ஒன்றோடு ஒன்று மோதிய விபத்து ஏற்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்டோருக்கு காயங்களும். 12- பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து ஜீயபுரம் போலீஸாருக்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தகவல் அளித்தனர் தகவல்கள் அடிப்படையில் சம்பவம் வந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.அரசு பஸ், டூரிஸ்ட் வேன் மற்றும் லோடுவேன் இவை ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது குறித்து ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்