திருச்சி மாவட்டம் வையம்பட்டியில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஒன்றிய 6-வது வார்டு கவுன்சிலுக்கு வாக்குச்சாவடி எண் 30, 31 மற்றும் 37 ஆகிய வாக்குசாவடிகளுக்குள் அத்துமீறி நுழைந்த மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது மற்றும் திருவெறும்பூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் KN.சேகரன் மற்றும் அவருடன் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திமுகவை சார்ந்த 100 நபர்கள் தேர்தல் விதிமுறையை மீறி வாக்குச் சாவடியை கைப்பற்ற முயற்சி செய்வதாகவும்,

இந்த இடைத்தேர்தலை நேர்மையாகவும் நியாயமாகவும் நடைபெறுவதற்கு தேர்தல் ஆணையமும், மாவட்ட நிர்வாகமும் உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி அதிமுக மணப்பாறை ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் அதிமுகவினர் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுட்டனர். இந்த இடைத்தேர்தலை நேர்மையாகவும் நியாயமாகவும் நடைபெறுவதற்கு தேர்தல் ஆணையமும், மாவட்ட நிர்வாகமும் உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி அதிமுக மணப்பாறை ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் அதிமுகவினர் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *